;
Athirady Tamil News

வாக்காளர் பதிவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

0

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இளம் வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல்
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.