;
Athirady Tamil News

கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள்

0

கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தேசிய கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பி.சி. விக்ரமரத்ன கூறியுள்ளார்.

வெளியாகவுள்ள வர்த்தமானி
மேலும், கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.