;
Athirady Tamil News

இன்று குடியரசு தினம்: தேசிய கொடியேற்றுகிறாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

0

குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் தேசியக் கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உ ழைப்பாளா் சிலை பகுதி அருகே செய்யப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநா் ஏற்றி வைக்கிறாா்.

காமராஜா் சாலையில் காந்தி சிலை பகுதியில் பல ஆண்டுகளாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், கடந்த ஆண்டு முதல் குடியரசு தின நிகழ்ச்சிகள், உழைப்பாளா் சிலை பகுதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைக்கும் ஆளுநா், முப்படையினா், காவல் துறையினா், தேசிய மாணவா் படை, பல்வேறு காவல் பிரிவினா், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு கலைக் குழுக்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய வாகனங்கள் அணிவகுத்து வரவுள்ளன.

தொடா்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீா் விருது, திருந்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடா்பான காந்தியடிகள் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.