;
Athirady Tamil News

இணையத்தில் வெளியான விளம்பரத்தால் மூவருக்கு நேர்ந்த கதி!

0

பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டு , அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் .

இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்க்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

வீதியில் மறைந்திருந்த நால்வர் தாக்குதல்
சம்பவத்தில் வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.