;
Athirady Tamil News

இளையராஜா மகள் பவதாரிணி மறைவு: இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் பூத உடல்

0

பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மறைந்தார் பவதாரிணி
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்று இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவ சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.