;
Athirady Tamil News

ரயிலில் 10 நிமிடங்களுக்குள் இருக்கையில் அமர வேண்டும்., இல்லையெனில்.. ரயில்வேயின் புதிய விதி

0

நீண்ட தூர ரயிலில் அடிக்கடி செல்பவரா நீங்கள்? ஒரு ரயில் நிலையத்திலிருந்து Berthஐ முன்பதிவு செய்துவிட்டு, அடுத்த நிலையத்தில் ஏறிச் செல்லும் செல்ல பழக்கம் உள்ளவரா?

இனி அப்படியொரு யோசனை இருந்தால் மறந்துவிடுங்கள். அந்த நாட்களெல்லாம் முடிவுக்கு வருகின்றன. ரயில்வே இனி நேரத்தைக் கணக்கிடப் போகிறது.

நீங்கள் ரயிலில் ஏற வேண்டிய இடத்திலிருந்து 10 நிமிடங்களுக்குள் உங்கள் இருக்கையில் அமர வேண்டும். இல்லையெனில் உங்கள் முன்பதிவு ரத்து செய்யப்படலாம்.

இந்த முறை ரயில்வே துறை கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பாரிய போக்குவரத்து நிறுவனம் ரயில்வே. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.

பயணிகள் IRCTC அல்லது பிற ஆன்லைன் சேனல்கள் அல்லது ரயில்வே டிக்கெட் முன்பதிவு கவுண்டரில் முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். தற்போது இந்திய ரயில்வே புதிய விதிகளை கொண்டு வரவுள்ளது.

நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகளிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து போர்டிங் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு மூன்று ஸ்டேஷன்களைக் கடந்ததும் ரயிலில் ஏறுகிறார்கள்.

இந்த பழக்கம் பல பயணிகளிடம் காணப்படுகிறது. ஆனால் இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ரயில்வே கூறுகிறது.

புதிய ரயில்வே விதிகளின்படி, திட்டமிட்ட நேரத்தில் 10 நிமிடங்களுக்குள் உங்கள் இருக்கையை அடையவில்லை என்றால் சிக்கலைச் சந்திக்க நேரிடும்.

ஏனெனில் டிக்கெட் பரிசோதகர் குறிப்பிட்ட போர்டிங் பாயின்ட்டுக்குப் பிறகு 10 நிமிடங்கள் காத்திருக்கிறார். நீங்கள் இன்னும் உங்கள் இருக்கையை அடையவில்லை என்றால், டிக்கெட் பரிசோதகர் உங்கள் இருக்கை காலியாக இருப்பதாகக் குறிப்பார்.

நீண்ட தூர ரயில்களில், டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையத்திற்குப் பதிலாக அடுத்த ரயில் நிலையத்திலிருந்து பல பயணிகள் ரயிலில் ஏறுகின்றனர்.

அப்படியானால், டிக்கெட் பரிசோதகர்களுக்கு எந்த இருக்கை உள்ளது அல்லது எந்த இருக்கை காலியாக உள்ளது என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். அதனால்தான் ரயில்வே துறை இந்த முடிவை எடுக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.