;
Athirady Tamil News

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : குவிக்கப்பட்டுள்ள பெருமளவு பொலிஸார்

0

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளுக்காக பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து 380 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார்
கடந்த 25ஆம் திகதியில் இருந்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவான அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலர் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறு அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்கத்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.