;
Athirady Tamil News

மாலைத்தீவில் இலங்கை மீனவர்கள் 13 பேர் அதிரடி கைது!

0

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் (MNDF) கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.