;
Athirady Tamil News

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்!

0

பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் தலையில் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய, பதுலுஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டதையடுத்து சந்தேக நபர் குறித்த உறுப்பினரின் தலையில் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.