;
Athirady Tamil News

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான பெண் கைது

0

கொழும்பில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று (28.01.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்கிஸ்ஸை , படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா எனும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை
பொரலஸ்கமுவை பிரதேசத்தில் வைத்து பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவரிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அப்பகுதி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.