;
Athirady Tamil News

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்

0

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த 29ஆம் திகதி பதவி விலகியதாக அதிபரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்
இந்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களும் நேற்று (2) நடைமுறைக்குவரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

முதலாவது வர்த்தமானி அறிவித்தலில் படி அமைச்சர் லொஹான் ரத்வத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.