;
Athirady Tamil News

விளக்கமறியலில் கெஹலிய ரம்புக்வெல்ல

0

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கு தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.