;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! 6 பேர் கைது

0

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

17 வயது சிறுவன்
வடக்கு அயர்லாந்தின் County Londonderry-யில் Limavady பகுதியில் 17 வயது சிறுவன் Blake Newland சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, Blake உடன் 50 வயது மதிக்கத்தக்க நபரும் காயமடைந்துள்ளார்.

இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிறுவன் Blake சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த நபர் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

6 பேர் கைது
இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம், மேலும் அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.