;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறிய இருவர் கைது

0

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(03) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்தியசாலைக்குள் உட்புகுந்த இருவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முறைபாடுகள்
அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கைபேசிகள் உள்ளிட்டவை களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறைபாடுகள் செய்துள்ள போதிலும் காவல்துறையினரின் விசாரணைகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோயாளிகள் காவல்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைபவர்கள் , வைத்திய சாலை வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த வைத்தியசாலை வளாகத்தில் காவல்நிலைய காவலரண் ஒன்றை அமைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.