;
Athirady Tamil News

இலங்கையை வந்தடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா

0

யுவன் லோங் டிரைவ்(U1 LONG DRIVE) இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கொழும்பை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை (05.02.2024) அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காக யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னாயத்த கலந்துரையாடல்
இந்நிலையில் யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் இன்று மாலை கொழும்பு தாமரைக்கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள யுவன் லோங் டிரைவ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது Aaraa Entertainment வழங்கும் யுவன் சங்கர் ராஜாவின் குறித்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான ஹரிச்சரன், என்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம்விஷால், குக்சார்,சௌந்தர்யா, கௌதம், எம்.சி.சனா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.