;
Athirady Tamil News

பெலியத்தை ஐவர் படுகொலையில் தொடரும் கைதுகள்

0

பெலியத்தை பகுதியில் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 12 பேர் கைது
மாத்தறை , பெலியத்த பகுதியில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஐவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தில், அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், கொலை சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.