;
Athirady Tamil News

நீதிமன்றின் அறிவிப்பால் ட்ரம்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு

0

நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நீதிமன்றம் தெரிவித்த பதிலால் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் அதிபருக்கான எந்தவொரு அதிகாரமும் டிரம்ப் மீதான விசாரணையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்காது என நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். மேலும் முன்னாள் அதிபராக பதவி வகித்த தனக்கு, இந்த வழக்கின் விசாரணைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி டிரம்ப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வோஷிங்டன் நீதிமன்றில் மேல்முறையீடு
இந்த கோரிக்கையை நீதிபதி தான்யா சுட்கான் நிராகரித்தார். இதையடுத்து டிரம்ப் தரப்பில் வோஷிங்டன் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு வோஷிங்டன் நீதிமன்றில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கைப் பொறுத்தவரை, முன்னாள் அதிபர் டிரம்ப் ஒரு சாதாரண குடிமகனுக்கான அதிகாரங்களுடன் விசாரிக்கப்படுவார்.

அவர் அதிபராக பணியாற்றியபோது அவருக்கு பாதுகாப்பு அளித்த எந்தவொரு அதிகாரமும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.