;
Athirady Tamil News

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

0

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் குறைபாடுகள் இனங்காணப்பட்ட 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் இரு உணவகங்களினை சீல் வைத்து மூடவும் மல்லாக நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.