;
Athirady Tamil News

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

0

காசாவுக்கு ஆதரவாக செங்கடலில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

“உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான செயற்பாடு காசாவின் பல்வேறு பகுதிகளை அடைய வேண்டும். இல்லையெனில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம், ”என்று ஹவுத்தி தலைவர் அப்தெல் மாலெக் அல்-ஹவுத்தி இன்று தொலைக்காட்சியில் தோன்றி தெரிவித்துள்ளார்.

எந்த நன்மையும் செய்யாது
தமக்கு எதிரான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தாக்குதல்கள் “அமெரிக்கா, பிரிட்டன் அல்லது இஸ்ரேலுக்கு எந்த நன்மையும் செய்யாது” என்று அல்-ஹவுத்தி மேலும் கூறினார்.

வான்வழி தாக்குதல்
முன்னதாக வியாழனன்று, மேற்கு யேமனில் உள்ள சலிஃப் துறைமுகத்தை அமெரிக்க,இங்கிலாந்து வான்வழி மூலம் தாக்கியதாக ஹவுத்தி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.