;
Athirady Tamil News

நிர்க்கதியான 66 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!

0

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்து நிர்க்கதியான நிலையில் நாடு திரும்பியுள்ளனர் .

குறித்த தொழில்சாலைகளில் பணிபுரிந்த 66 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

முன்அறிவித்தல் வழங்காது மூடப்பட்ட தொலிழ்சலைகள்
தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்குக் கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் .

அதேவேளை குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.