;
Athirady Tamil News

பலாலி கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் , தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடித பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து , காணி விடுவிப்புக்கான அளவீட்டு பணிகள் உள்ளிட்ட இதர பணிகளை முன்னெடுக்கும்.

அதனை அடுத்து காணிகளை விடுத்து உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.