;
Athirady Tamil News

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

0

எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கூட்டணி
அதிபர்த் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கூட்டாக இணைந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியின் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படாத நிலையில் கட்சிக்குள் பல குழறுபடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.