;
Athirady Tamil News

பெண் நாயை தீ வைத்து எரிந்த கொடூர நபர்! கம்பஹாவில் சம்பவம்

0

கம்பஹா, இம்புல்கொடவில் பெண் நாயொன்றுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கம்பஹா, இம்புல்கொடவில் பகுதியில் வசிக்கும் 65 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இரவு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் தீ வைக்கப்பட்ட செல்ல நாய் அதன் உரிமையாளர்களால் கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்ட போதிலும் பலத்த தீக்காயங்களால் இறந்துள்ளது.

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களின் உரிமையாளரான சந்தேக நபர், தனது அண்டை வீட்டு பெண் வளர்ப்பு நாய் தனது நாய்களுடன் இனச்சேர்க்கை செய்ததாகக் கூறப்பட்டதால் கோபமடைந்து எரிந்ததாக விசாரணையில் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து யக்கல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.