;
Athirady Tamil News

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

0

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எந்தவொரு மட்டத்திலும் உள்ள எந்தவொரு நபரும் விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிவாரணத் திட்டத்தில் மாகாண சபை பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் இன்று (13.02.2024) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டம்
அத்துடன் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ஆம் திகதி கோரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, உதவித்தொகை பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் முறையின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் அளவுகோலின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் சமமாக பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

அத்துடன் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இழப்பீடு பலன்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.