;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : தரையிறங்கு கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்

0

ரஷ்யாவிற்கு சொந்தமான தரையிறங்கு கப்பல் ட்ரோன் தாக்குதலில் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் ட்ரோன்கள் (DIU) பெப்ரவரி 14 காலை கருங்கடலில் ரஷ்ய தரையிறங்கும் கப்பலான Tsezar Kunikov ஐ தாக்கியதாகவும் தாக்குதலை அடுத்து கப்பல் கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில்
முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில், Tsezar Kunikov ரஷ்ய துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் நிறுத்தப்பட்டது மற்றும் உக்ரைனியப் படைகள் சரடோவ் தரையிறங்கும் கப்பலை மார்ச் 2022 இல் மூழ்கடித்தபோது இந்த கப்பலும் சேதம் அடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.