;
Athirady Tamil News

தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு யாழிலும் தடை

0

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் இன்றையதினம் வியாழக்கிழமை வழக்குதாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் மாநாட்டிற்கு தடை விதித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.