;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு விமானத்தை பறக்க விட தயாராகும் இலங்கை!

0

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தமானது இன்று (16) காலை கைச்சாத்திடப்பட்டது.

இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கும் இடையே கைசாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.