;
Athirady Tamil News

இரு அரச நிறுவனங்களை ஒன்றிணைந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் என்பன ஒன்றிணைந்த அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது நிறுவனங்கள் மறுசீரமைப்புக் குழு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு நடத்திய ஆய்வில், இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது கடும் கடன் சுமையில் இருப்பது தெரியவந்துள்ளது.

60 மில்லியன் ரூபா
இதன்படி, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு 1300 மில்லியன் ரூபா கடனும், வானொலி கூட்டுத்தாபனத்திற்கு 800 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், இந்த இரண்டு நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் மாதாந்தம் சுமார் 60 மில்லியன் ரூபாவாகும். இரண்டு நிறுவனங்களின் சம்பளத்திற்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவனங்கள் தேவையான நிதியைக் கூட ஈட்ட முடியாமல் சிரமப்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களையும் மறுசீரமைத்து கூட்டு அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், இது தொடர்பாக நாட்டுக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்த இரண்டு நிறுவனங்களிலும் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.