;
Athirady Tamil News

காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

இலங்கையில் காணிகளின் விலை எதிர்வரும் காலங்களில் வேகமாக வீழ்ச்சியடையுமென தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை
குறித்த செய்தியில்,

இலங்கையில் காணிச் சந்தையை திறக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கியதன் மூலமும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத காணிகளையும் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்ததன் மூலமும் இந்த நிலைமை ஏற்படுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை இதுவரை திறந்த சந்தையாக இருந்த காணி வர்த்தகம் மூடப்படுவதன் மூலம் இந்நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20 இலட்சம் மக்களுக்கு அடமானம் வைக்கக்கூடிய காணி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் நாட்டின் சந்தையில் காணி வழங்கல் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் காணி விலையில் வீழ்ச்சி ஏற்படும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனியாரிடம் காணி வாங்கும் தேவை குறையும்
அதோடு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியை விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு தனியாரிடம் கொடுப்பதன் மூலம் மக்கள் தனியாரிடம் காணி வாங்கும் தேவை குறையும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.

அதுமட்டுமின்றி கடந்த வரவு, செலவுத் திட்டத்தில் ரயில்வே சிறிய நகரங்கள், வீட்டுத்திட்டங்கள், சுற்றுலா விடுதிகள், Station Plaza, மற்றும் வணிக வளாகங்களுக்கு, அதிகளவான காணிகளை வைத்திருக்கும் ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணியை குத்தகை அடிப்படையில் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் காரணமாக , காணி விலை குறைவை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.