;
Athirady Tamil News

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் பலி: கொழும்பில் சம்பவம்

0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.