;
Athirady Tamil News

செங்கடலில் இலங்கையின் நகர்வு! இரகசியமாக அனுப்பட்ட கப்பல்

0

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்புவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்யஉறுதி செய்துள்ளதுடன் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்துநடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.

நடவடிக்கையின் இரகசிய தன்மை
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்து இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான தகவல்களை பகிரங்கப்படுத்தினால் அவற்றை பயன்படுத்தி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட கப்பல்களை தாக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்பின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பயணம்
மிகவும் ஆபத்தான செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்குகப்பல்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் யுத்தகப்பல்கள் தாங்கள் செயற்படும் இடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை எனவும் தாக்குதல் ஆபத்தை தவிர்ப்பதற்காக தங்களின் இலத்திரனியல் சமிக்ஞைகளை கூட அவதானமாகவே பயன்படுத்துவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு ரோந்தில் இலங்கையும் இணைந்துகொள்ளும் என ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.