;
Athirady Tamil News

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

0

இலங்கைகயின் பிரதான வர்த்தக நிலையமான தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ள வர்த்தக சங்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போலிப் பிரச்சாரங்கள்
மேலும், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி ஊடாக விவசாய அமைச்சரை தொடர்பு கொண்டு இந்த சர்ச்சை குறித்து கேட்டறிந்து வர்த்தகர்களை அமைச்சர் பிரமித்த தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாது என அவர் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.