;
Athirady Tamil News

யாழ்.நகர் மத்தி போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கலந்துரையாடல்

0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு யாழ்.மாநகர சபையினர் , யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , போக்குவரத்து சபை அதிகாரிகள் உள்ளிட்டவர்களை அழைத்து நகர் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

யாழ்.நகர் பகுதியில் வைத்தியசாலை வீதி , மின்சார நிலைய வீதி மற்றும் ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட வீதிகளில் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் , வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றன. இது தொடர்பில் நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் ,உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.