;
Athirady Tamil News

கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம்

0

கேரளாவின் கல்வித்துறை வளர்ச்சியின் மற்றுமொரு அங்கமாக முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் ரோபோ இதுவே ஆகும்.

மேக்கர்லேப்ஸ் எடுடெக் (Makerlabs Edutech) தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஐரிஸ் என்ற ஏஐ ஆசிரியர் உருவாக்கப்பட்டுள்ளது.

மனித உருவம்
அதாவது திருவனந்தபுரத்தில் உள்ள கே.ரி.சி.ரி உயர் நிலைப் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரிஸ், மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட மனித உருவம் ஆகும்.

ஐரிஸ் கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதுடன் மூன்று மொழிகளைப் பேசும் திறன் மற்றும் சிக்கலான கேள்விகளைச் சமாளிக்கும் திறனுடன், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணத்தை வழங்குகிறது.

கல்விச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது
குறிப்பாக மேக்கர்லேப்ஸ் நிறுவனமானது ஐரிஸை ஒரு ரோபோவை விட அதிகமாகக் கருதுகிறது. இது ஒரு புதுமையான குரல் உதவியாளராகவும் கல்விச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரிஸ் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் இயக்கப்படுவதுடன் தடையற்ற செயல்திறன் மற்றும் பதிலளிக்கும் தன்மையை உறுதியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.