;
Athirady Tamil News

காஸாவில் பரிதாபம்., பாராசூட்டில் வந்து விழுந்த உணவை பிடிக்கச் சென்ற 18 பேருக்கு நேர்ந்த துயரம்

0

இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் பொதுமக்கள் உயிரிழக்க மறுபுறம் பட்டினியின் கூச்சல் என காஸாவின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.

உண்பதற்கு உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மக்களை மறைந்துகொள்ள ஒரு கூடாரம் இல்லை. மனிதாபிமான உதவிக்காக காத்துக்கிடக்கின்றனர்.

அதே சமயம் எந்த திசையில் இருந்தும் மரணம் வரும் என்பதால் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காலத்தை கடத்துகிறார்கள்.

இந்தநிலையில், காஸாவில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. விமானத்திலிருந்து வான்வழியாக போடப்பட்ட உணவைப் பெற முயன்ற 18 பேர் உயிரிழந்தனர்.

போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு உதவ உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வருவது. சாலை, விமானம் மற்றும் கடல் வழியாக உணவு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க விமானங்கள் வீசிய உணவுப் பெட்டிகளை மீட்க கடலில் இறங்கிய 18 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 12 பேர் உணவுப் பெட்டிகள் விழுந்ததில் இறந்தனர், மேலும் ஆறு பேர் தண்ணீரின் காரணமாக உயிரிழந்தனர்.

வடக்கு காசாவில் உள்ள லஹியா கடற்கரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.