;
Athirady Tamil News

யாழில் வைத்திய சாலை பணியாளர் மீது தாக்குதல்

0

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான் இறங்குதுறையில் வந்து இறங்கிய வேளை, அங்கு காத்திருந்த இருவர் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் , பொதுமக்கள் பார்த்திருக்க இருவரும் பணியாளர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பணியாளர் சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.