;
Athirady Tamil News

அநுராதபுரத்தில் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலம் : வெளியாகியுள்ள தகவல்

0

அனுராதபுரம் – ஹிடோகம (Anuradhapura) பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிடோகம – திவுல் ஏரியில் துணியால் சுற்றப்பட்டு கிரனைட் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று நேற்றைய தினம் (09.04.2024) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, சடலமாக மீட்கப்பட்டவர் தங்கஹகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ​​கடந்த 8ஆம் திகதி காலை 9 மணியளவில் தாய் – தந்தைக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், மகனும் தலையிட்டதால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில், கொலை செய்யப்பட்ட நபரின் 39 வயது மனைவி மற்றும் 24 வயது மகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனையில் நபர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, சடலத்தை ஏரிக்கு எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.