;
Athirady Tamil News

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

0

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தாறுமாறாக ஓடிய கார்
நேற்று அதிகாலை 8 பேர் பயணித்த கார் டெல்லி-ஆக்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் தாறுமாறாக ஓடிய கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், காரை இயக்கிய சாரதி மது அருந்தியது தெரிய வந்தது.

அத்துடன் விபத்தில் சிக்கியவர்கள் 8 பேரும் கிரேட்டர் நொய்டாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பீகாரில் நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.