;
Athirady Tamil News

கனேடிய மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு: பணி நேரத்தில் மாற்றம்

0

கனடாவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களின் பணத்தேவைகளுக்காக வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கனாடவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால் அவர்களது நோக்கமே பணி செய்வதற்காக மாறியுள்ளதாக அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு
கனடாவில் கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் அதனை சமாளிப்பதற்காக மாணவர்களை மேலதிகமாக சில நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் இன்று (30) முதல் கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்
இது தொடர்பில் புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்ல மேலும் தெரிவிக்கையில், “கனடாவுக்கு சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் நோக்கமே, அவர்களுக்கு கல்வி அளிப்பதற்காகத்தான். ஆனால், அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிப்பதால், கனடாவுக்கு வரும்போதே, கல்வி கற்கும் நோக்கத்துடன் வராமல், பணி செய்யும் நோக்கத்துடன் வருபவர்கள் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த திட்டம் செப்டெம்பர் மாதம் வரையிலும் நடைமுறையில் இருக்குமெனவும் அதன் பிறகு 24 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிட்டு அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.