;
Athirady Tamil News

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

0

மெரிக்காவில் சிக்கன் உணவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு லொட்டரியில் கோடிகளில் அதிர்ஷடம் அடித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் தலைநகரமான அனாபொலிஸை சேர்ந்த இந்த வயதான பெண், தனியுரிமை காரணங்களுக்காக, தனது பெயரை Faithful Grandmother என அடையாளப்படுத்திக்கொண்டார்.

அவர் கடந்த ஏப்ரல் 22-ஆம் திகதி மேரிலாந்தில் உள்ள Royal Farms உணவகத்தில் சிக்கன் உணவு ஓர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தார்.

காத்தருக்கும் அந்த நேரத்தில், அவர் 10 டொலர் மதிப்புள்ள Casino Royale Slots ticket-ஐ வாங்கியுள்ளார்.

அவர் வாங்கிய எண்ணில் ஜாக்பாட் அடித்தது. அப்போது தன்னுடன் இருந்த மக்களிடம் லொட்டரி சீட்டைக் காண்பித்து, “எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என நினைக்கிறன்” என்று மிகவும் சாந்தமாக கூறியுள்ளார்.

அவரது மக்களும் உடனே சீட்டை வாங்கி சோதித்தபோது அவர் வெற்றி பெற்றது உண்மை தான் என தெரியவந்தது.

அவருக்கு இந்த லொட்டரியில் 229,680 அமெரிக்க டொலர், அதாவது இலங்கைப் பணமதிப்பில் சுமார் ரூ.6.8 கோடி பரிசு விழுந்துள்ளது.

இந்தப் பணத்தை என்ன செய்வது என்றுகூட தெரியாத அப்பெண், பரிசுத்தொகையை தனது பேரக்குழந்தைகளுக்கு கொடுத்து உதவ உள்ளதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.