;
Athirady Tamil News

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

0

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

விசேட அறிவிப்பு
பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக சிறப்பான ஏற்பாடு ஒன்றை ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள நினைக்கும் மாணவர்கள் நாளை (மே 4) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையினுள் பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு செல்லவும்.

மேலும், காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்களும் மேல் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் திறந்திருக்கும் எனவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.