;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள். வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவை கடத்தும் வகையில் விநியோகிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.