;
Athirady Tamil News

சுவிஸில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு ; கனேடிய பிரதமர் தெரிவிப்பு

0

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

சுவிட்சர்லாந்தின் பல ஆண்டுகளில் மிகவும் லட்சிய முயற்சி
இதில் உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த உச்சி மாநாடு ஒரு பாரிய மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ய நடுநிலையான சுவிட்சர்லாந்தின் பல ஆண்டுகளில் மிகவும் லட்சிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

கனேடிய பிரதமரின் பதிவு ரஷ்யா உடனான மோதலில் உக்ரைனுக்கு ஆதாரவான நிலைப்பாட்டில் கனடா இருந்து வருகிறது.

கொந்தளித்த மக்கள் இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அமைதி மாநாடு குறித்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ”உக்ரைனுக்கான முதல் அமைதி உச்சி மாநாடு சூன் மாதத்தில் நடைபெறுகிறது.

கனடா அங்கு இருக்கும். உக்ரைனுக்கான நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான எங்கள் பகிரப்பட்ட இலக்கை முன்னேற்றுவதற்கு, மற்ற உலகத் தலைவர்களுடன் இணைவதற்கு நான் எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.