;
Athirady Tamil News

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

0

பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

மாலை 6.15 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புப் படைக்கு அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக புகாரளித்துள்ளன.

முனைமம் 3-ல் வெடிகுண்டு செயலிழப்புக் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்பாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையத்துக்கு இத்தகைய மிரட்டல் வந்துள்ளதால் நாட்டின் தலைநகரில் பரபரப்பு நிலவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.