;
Athirady Tamil News

குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

சீதுவை, ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று(12.05.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
இதனால் பாதிக்கப்பட்ட மேற்படி நபரும், இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மேலும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.