;
Athirady Tamil News

வடகொரியாவில் விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்!

0

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர்.

அந்தவகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரிய ஆட்சி சிவப்பு உதட்டுச்சாயம் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமான ஃபேஷனையும் தடை செய்ய சட்டங்களை இயற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சட்டத்தை மீறும் பெண்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. வடகொரியாவில் முதலில் இராணுவம் என்ற கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து வட கொரியர்களும் ஒருவருக்கொருவர் பிரித்தறிய முடியாத வகையில் வாழ வேண்டும்.

மேலும் கவர்ச்சியின் அடையாளமாக சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்ய கிம் ஜாங்-உன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.