;
Athirady Tamil News

சர்வதேச மாணவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு

0

பிரித்தானிய (Britain) பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணிபுரியும் வகையில் பட்டதாரி விசா (graduate visa) வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த விசாவின் தவறான பயன்பாடுகளை தடுப்பதற்காக மதிப்பாய்வு செய்து அதன் முடிவுகளை அறிவிக்கவிருப்பதாக பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது.

அத்தோடு, ஏற்கனவே பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி , சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்.

மதிப்பாய்வின் முடிவு
இந்நிலையில், மதிப்பாய்வின் முடிவுகளில் பட்டதாரி விசாக்கள், தவறாக பயன்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரித்தானிய அரசின் புலம்பெயர்தல் ஆலோசனை குழு (The Migration Advisory Committee (MAC), சர்வதேச மாணவர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை செய்ய அனுமதிப்பது தொடரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.