;
Athirady Tamil News

யாழில் குடும்ப பெண் கொலையில் திடீர் திருப்பம்; கணவன் கைது!

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை
சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார் சடலத்தை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால் , பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் கொலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெண்ணின் கணவரை நேற்றைய தினம் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர்.

கணவன் – மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு , தர்க்கம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ,அடிப்படையில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.