;
Athirady Tamil News

உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார்: விளாடிமிர் புடின் பகிரங்கம்

0

ரஸ்ய உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புடின் நேற்று (16)சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

பேச்சுவார்த்தைக்குத் தயார்
2 நாட்கள் தங்கும் அவர் அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனா செல்லும் முன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புடின், உக்ரைன் போர் தொடர்பில் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததில்லை என்று கூறியுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம், என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா உட்பட, பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.