;
Athirady Tamil News

‘கோவேக்ஸின்’: 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

0

கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ‘ஸ்பிரிங்கா் நேச்சா்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா தீநுண்மிக்கு (வைரஸ்) எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னா் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ஆம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

வளரிளம் பருவத்தைச் சோ்ந்த 635 போ், 18 வயதுக்கு மேற்பட்ட 291 போ் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமாா் 50 சதவீதம் போ் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனா். அவா்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவா்களில் 10.5 சதவீதம் பேருக்கு தோல் சாா்ந்த பிரச்னைகளும், 10.2 சதவீதம் பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7 சதவீதம் பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டோா்…: 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9 சதவீதம் பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5 சதவீதம் பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8 சதவீதம் போ் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநாா்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சாா்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7 சதவீதம் பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹாா்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நால்வா் உயிரிழப்பு: கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். அவா்களுக்கு சா்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு அரிதாக ரத்தம் உைல், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குைல் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று அந்தத் தடுப்பூசியைத் தயாரித்த பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.